ஜெயேந்திரர்: அரசை கண்டித்து இன்று விஎச்பி மாநாடு
சென்னை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரின் கைதைக் கண்டித்து வி.எச்.பி. சார்பில் இன்று இந்து சமுதாய பாதுகாப்பு மாநாடு சென்னையில்நடைபெறுகிறது.
சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கல், முன்னாள் மத்திய அமைச்சர்முரளி மனோகர் ஜோஷி, அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன், வி.எச்.பி. மூத்த தலைவர் கிரிராஜ் கிஷோர், உடுப்பி பெஜாவர்மடாதிபதி விஸ்வேச தீர்த்தர், மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக தமிழகம் வந்திருக்கும் முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர் ஆகியோர் கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரைச்சந்தித்தனர். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் மடத்தில் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷி,
ஜெயேந்திரர் மெளன விரதத்தில் இருப்பதால் அவருடன் பேச முடியவில்லை. இருப்பினும் பூஜையில் கலந்து கொண்டோம்.
சங்கராச்சாரியார்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து தொடர்ந்து மக்களிடம் தெரிவிப்போம். தமிழக அரசு இந்துமதத்தின் மீதும், காஞ்சி மடத்தின் மீதும் தொடுத்து வரும் தாக்குதல்கள் குறித்தும் மக்களிடம் தெரிவிப்போம்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிக்காக போராடுவோம்.
இந்த மாநாட்டிற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அனுமதி கோரி வி.எச்.பியினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியதும், பின்பு 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications