For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி: அழுகிய உடல்களை அகற்றிய துப்புறவு ஊழியர்களுக்கு ஜெ. பரிசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமி பாதித்த பகுதிகளில் அழுகிய உடல்களை கைகளால் அகற்றிய 4,791 துப்புறவுப் பணியாளர்களுக்கும் தலா ரூ. 2,500வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் ஈடுபட வந்த ராணுவத்தினர் இந்த உடல்களை அகற்ற மறுத்துவிட்டதால், தமிழகம் முழுவதும் இருந்தும்மாநகராட்சி, நகராட்சித் துப்புறவுப் பணியாளர்கள் 4,791 பேர் நாகை, குமரி, கடலூர் மாவட்டங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அவர்களும் பொது மக்களும் சமூக நலத் தொண்டர்களும் தான் உடல்களை அகற்றினர். புல்டோசர்கள் கொண்டு பிணங்களைப்புதைக்க மண் தோண்டுவது, குடிநீரை சுத்திகரிப்பு செய்து தருவது போன்ற பணிகளையே ராணுவத்தினர் செய்தனர்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,

இந்த 4,792 துப்புறவுத் தொழிலாளிகளுக்கும் தலா ரூ. 2,500 வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதனால் அரசுக்கு ரூ. 1.2 கோடிசெலவாகும். ஆனால், அவர்கள் செய்த மிகப் பெரிய மனிதாபிமானப் பணிக்கு இது ஈடாகாது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடனுதவி தருவதாக மத்திய அரசு சொல்கிறது. கடனுதவி எல்லாம் போதாது.அவர்களுக்கு நிதியை முழுவதும் மானியமாகவே தர வேண்டும்.

படகுகள் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடன் வழங்குவதாகக் கூறுவது போதுமானதல்ல. முழு நிதியையும் மானியமாகத்தருமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இந்த நிதியை மீனவர்களுக்கு வங்கிகள் மூலமாக மத்திய அரசு தருவது தவறு.இதை மாநில அரசு மூலமாகவே வழங்க வேண்டும்.

மற்ற நாடுகள் எல்லாம் சுனாமி தாக்குதலில் இருந்து மீளவே பல நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில் முதல் கட்ட மீட்புநடவடிக்கைகளை மிக வேகமாக நடத்தி சாதனை படைத்தது தமிழக அரசு என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X