பிரேம்குமாரின் அட்டூழியங்கள்: விசாரிக்க சொல்கிறார் முரளி மனோகர்
சென்னை:
காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் மீது உள்ள புகார்களை முதலில் விசாரிக்க வேண்டும் என மூத்த பாஜக தலைவர்முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்ததைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் சார்பில்சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் இந்து சமுதாய பாதுகாப்பு மாநாடு- பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் உடுப்பி மடாதிபதி சுவாமி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள், வி.எச்.பி. தலைவர் கிரிராஜ் கிஷோர், அகிலஉலக துணைத் தலைவர் வேதாந்தம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, பாஜக தேசிய செயலாளர்இல.கணேசன் உளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜோஷி பேசுகையில், பிரேம்குமாரை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், பிரேம்குமார் மீது கடுமையான புகார்கள் நீதிமன்றத்தில் உள்ளன. அவர் மீது கடுமையானநடவடிக்கை எடுக்க காவல்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவரோ எஸ்.பியாக பதவி உயர்வுகொடுக்ப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான பிரேம்குமார் எஸ்.பியாக பணியாற்றுவது சட்டத்தைப் படுகொலைசெய்வதாகும். முதலில் பிரேம் குமாரை இடமாற்றம் செய்து அவர் மீதான புகார்களை விரிவாக விசாரிக்கவேண்டும்.
பீகார் சிறைகளில் கிரிமினல்கள் ராஜாங்கம் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஜெயேந்திரர் போன்றவர்களை தமிழகஅரசும், வேலூர் சிறை நிர்வாகம் மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தின. இந்தக் கைது நடவடிக்கையில்சர்வதேச சதி உள்ளது.
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆந்திராவில் தங்கியிருந்தஜெயேந்திரரை, அம் மாநில காங்கிரஸ் அரசு அனுமதி கொடுக்காமல் ஜெயேந்திரரை தமிழக போலீஸார் கைதுசெய்திருக்க முடியாது என்றார் ஜோஷி.