For Daily Alerts
Just In
சட்டசபைக் கூட்டம் முடிந்தது
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைந்தது.
டிசம்பர் 31ம் தேதி ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
எதிர்க்கட்சி சார்பில் ஆற்காடு வீராசாமி பேசினார். அப்போது ஆளும் தரப்புக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே பெரும்மோதல் மூண்டது.
இறுதியில் விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் கூட்டத் தொடரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.
அடுத்து மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடருக்காக சட்டசபை கூடும்.
Comments
Story first published: Tuesday, February 8, 2005, 5:30 [IST]