For Daily Alerts
Just In
பூட்டிய வீட்டில் தீ: தாய், 3 குழந்தைகள் பலி
கோவை:
கோவையில் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் தாய் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள பாலுசாமி நகரில் முருகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகன் வெளியூர்சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி மாரியம்மாள், மகள்கள் துர்கா, செல்வி, தனலட்சுமி மகன்கள் மாரிமுத்து, மூர்த்தி உள்ளிட்டோர்இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் முருகனின் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் பூட்டிய வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தமாரியம்மாள், துர்கா, செல்வி, தனலட்சுமி ஆகியோர் தீயில் கருகி இறந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர்.
தீக்காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்துத் தெரியவில்லை.
Story first published: Saturday, February 12, 2005, 5:30 [IST]