செப்டம்பரில் சட்டசபைக்கு தேர்தல் வரலாம்: ராமதாஸ்
காஞ்சிபுரம்:
தமிழக சட்டமன்றத்துக்கு வரும் செப்டம்பர் மாதத்திலேயே தேர்தல் வந்துவிடும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தொகுதி மறு சீரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இதில் அதிமுகவினர் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளதால் நாங்கள்விழிப்புடன் இருக்கிறோம்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் யாரும் பிளவு ஏற்படுத்திவிட முடியாது. நான், தம்பி திருமாவளவன், சகோதரர் பழ.நெடுமாறன், டாக்டர்சேதுராமன் ஆகியோர் கொண்ட கொள்கையில் தெளிவாகவே இருக்கிறோம்.
அதே போல திமுக-பா.ம.க. கூட்டணியும் வலுவாகவே உள்ளது.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்திலேயே சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்துவிடும் என்று நினைக்கிறேன் என்றார் ராமதாஸ்.
தேர்தலை முதல்வர் ஜெயலலிதா முன் கூட்டியே நடத்தலாம் என்பதால் பா.ம.கவும் தனது பொதுக் குழுவை விரைவில் கூட்டவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத்தை ஜெயலலிதா கலைத்துவிடுவார் என திமுக கூட்டணி திடமாக நம்புகிறது.












Click it and Unblock the Notifications