"மப்பில்" 50யை முத்தமிட்ட 30!!
சென்னை:
போதை தலைக்கேறியதில், 50 வயது பெண்ணை கட்டியணைத்து முத்தமிட்ட 30 வயது ரிக்ஷா ஓட்டியை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த தங்கம் என்ற 50 வயது பெண்மணி, சென்னையில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துவருகிறார். தங்கச் சாலை பகுதியில் தங்கியிருக்கிறார்.
யானை கவுணி பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்து கொண்டிருந்த அவர், அங்கு ரிக்ஷா ஓட்டி வந்தஜெகன்னாதன் (வயது 30) என்பவரை நிறுத்தி தன்னை தங்கச்சாலை பகுதியில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார்.
குடிபோதையில் இருந்த ஜெகன்னாதன், தங்கத்தை ரிக்ஷாவில் ஏற்றிக் கொண்டு சென்றார். பாதி தூரம் சென்றதும், குடிபோதை தலைக்கேற,ரிக்ஷாவை நிறுத்திய அவர் தங்கதத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டுள்ளார்.
அதிர்ந்து போன தங்கம் கூக்குரலிட்டுள்ளார். இதைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஓடி வந்து தங்கத்தைமீட்டார். இதையடுத்து ஜெகன்னாதன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications