ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.ஏ.ராஜா மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகியுள்ள பிரபல கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ. ராஜா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பிரபலமான ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரான எஸ்.ஏ.ராஜா, முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாகொலை வழக்கில் கைதாகியுள்ளார். உடல் நலக்குறைவால் தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் ராஜாவின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications