திருத்தணி: பஸ் மரத்தில் மோதி 5 பேர் பலி
திருத்தணி:
சென்னையிலிருந்து திருப்பதி சென்ற தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து திருத்தணி அருகே சாலையோர புளிய மரத்தில்மோதியதில் 5 பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னையிலிருந்து திருப்பதிக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து சென்றது. பஸ் திருத்தணி அருகே நெடும்பரம் என்ற இடத்தில்போய்க் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த புளியமரம் மீது திடீரென மோதியது.
இதில் பஸ் நடத்துநிர் குமரேசன், ஓட்டுநர் வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரேக் சரியாக பிடிக்காத காரணத்தினால் தான் பஸ் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியதாக வழக்கமான காரணம் கூறப்பட்டாலும், அரைத்தூக்கத்துடன் காட்டுத்தனமான வேகத்தில் டிரைவர் பஸ்ஸை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.