டெல்லி தமிழர் பகுதியில் தீ: 4 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.
டெல்லி ராஜ்பத் நகர், ஜலவிஹார் பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் குடிசைகளில் வசித்து வருகிறார்கள். இந்த குடிசைப்பகுதியில் நேற்று திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 400 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
இந்தத் தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. ஏராளமான பொருட்களும் தீயில் கருகிவிட்டன. மின் கசிவு காரணமாக இந்ததீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications