For Daily Alerts
Just In
சங்கர மட வக்கீல்களுக்கு இடைக்கால முன் ஜாமீன்
காஞ்சிபுரம் :
காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சங்கரமடத்தைச் சேர்ந்த 3வழக்கறிஞர்களுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை சிறையில் சென்றுமிரட்டியதாக சங்கரமடத்தைச் சேர்ந்த ரேவதி வாசுதேவன், சண்முகம், தியாகராஜன் ஆகிய 3 வழக்கறிஞர்கள் மீதுபோலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இதையொட்டி 3 பேரும் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, 3 வழக்கறிஞர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
Story first published: Tuesday, February 22, 2005, 5:30 [IST]