அப்பல்லோவில் ரவி சுப்பிரமணியம்: தீவிர சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெஞ்சு வலி காரணமாக ரவி சுப்பிரமணியம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதால், சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்ரமணியம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை சென்னைக்குக் கொண்டு வந்து மேல் சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் ரவி சுப்பிரமணியம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன், ஈசிஜி ஆகிய சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications