போதை: செளதியில் இந்தியர் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
தமாம்:
செளதியில் போதை மருந்து கடத்திய இந்தியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
செளதி அரேபியாவில் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 12க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஹெராயின் போதை மருந்து கடத்திய ஷாஜகான் அதி பரம்பில் என்ற இந்தியர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு செளதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் தமாம் நகரில் செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி கொல்லப்பட்டார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவராவார்.
சவுதி அரேபியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோல கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications