For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சதுர்வேதி வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலி சாமியார் சதுர்வேதி உட்பட 4 பேர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஒருவரின் மனைவி மற்றும் மகளைக் கடத்தி செல்ல முயன்றதாக சென்னை தி.நகரைச் சேர்ந்தசதுர்வேதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவரும், இவரது கூட்டாளிகளும் பல்வேறு செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 21 பிரிவுகளின் கீழ் சதுர்வேதிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.

இவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த லட்சுமி நாராயணன், பாலு, ஸ்ரீதரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்த 4 பேர் மீதும் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் போலீஸார் 60 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 23 குற்றச்சாட்டுக்கள், 76 சாட்சிகள், 75 ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X