ஜெயலலிதாவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை:
நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களையும், மத்தியஅமைச்சர்களையும் முதல்வர் ஜெயலலிதா கண்ணியமற்ற முறையில், இழிவாகப் பழித்துப் பேசுவதை தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்தியா முழுமையும்வழங்கப்பட்ட ரூ. 2,731 கோடியில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 1,612 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதை அவர் மறந்து விட்டார்,மறைத்துப் பேசுகிறார்.
எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் புரிவதையே குறிக்கோளாக கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் இல்லாதஒருவரைப் பற்றி இழிவாகப் பேசுவது சபை மரபுக்கு விரோதமானது.
ஜெயலலிதா பேசுவதையெல்லாம் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க சமயத்தில் அதற்குப் பதில்கொடுப்பார்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications