மகாபெரியவர் அவதார நிகழ்ச்சி: நீதிமன்றம் வராத ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்ளிட்ட 18 பேரின் சிறைக் காவலும் வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்கில் ஜனவரி 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் ஆஜரானபோதும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவில்லை.

ஜாமீனில் உள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 5 பேர் தவிர தவிர மற்ற 18 பேரின் சிறைக் காவலும் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், பல்வேறு சிறைகளில் உள்ள இந்த 18 பேரிடமும் விசாரணை நடத்தினார்.

பின்னர் அனைவரின் காவலையும் வரும் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும், பழனி, ஆறுமுகம், செந்தில்குமார் ஆகிய 5 பேர் மட்டும் நீதிபதி உத்தமராஜன் முன் இன்று ஆஜராக வேண்டும்.

ஆனால், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அவதார நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் தன்னால் இன்று நீதிமன்றம் வர முடியாது என்று கூறி ஜெயேந்திரர் சார்பில் நீதிபதி உத்தமராஜனிடம் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+