ரயில் வராத தண்டவாளத்தில் படுத்தவர் கருணாநிதி: ஜெ. கிண்டலோ கிண்டல் !
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி நடத்திய கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்வகையாக கிண்டலடித்தார். ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்தவர் தான் இந்தக் கருணாநிதி என்றார்ஜெயலலிதா.
பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு இடையே முதல்வர் குறுக்கிட்டுப் பேசுகையில்,
டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றக் கோரி தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்தார்கருணாநிதி என்று திமுகவினர் ரொம்பப் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள்.
உண்மையில், அந்த வழியாகச் செல்லும் ரயில் கிளம்பிப் போன பிறகுதான், இனிமேல் ரயில் வராது என்று உறுதிசெய்த பின்னர் தான் தண்டவாளத்தில் தலையை வைத்தார் கருணாநிதி.
உண்மையில் சொல்லப் போனால், அந்தப் பகுதியில் ஒரே ஒரு ரயில் மட்டுமே அப்போது இயங்கிக்கொண்டிருந்தது. அதுவும் போய்விட்டதா என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் தலையை தண்டவாளத்தில்வைத்தார் கருணாநிதி.
ரயில் வரும்போது தலையை வைத்திருந்தால் அவரது வீரத்தைப் பாராட்டலாம் என்று ஜெயலலிதா கூறியதற்குதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜெயலலிதாவுக்கு பதிலளித்து ஆற்காடு வீராசாமி பேசுகையில்,
ரயில் வருவதைத் தெரிந்துதான் தண்டவாளத்தில் தலைையை வைத்துப் படுத்தார் எனது தலைவர். அவரதுபோராட்டத்தால் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது தான் உண்மை.
அந்தப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் முதலமைச்சர் பிறந்திருக்கக் கூட மாட்டார் என்று நினைக்கிறேன்என்றார்.
இதைக் கேட்டதும் திமுகவினர் ஆரவாரம் செய்து மேசைகளைத் தட்டினர்.
அப்போது எழுந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், கவியரசு கண்ணதான் தனது வனவாசம் நூலில்இந்தப் போராட்டம் குறித்து விரிவாக எழுதியுள்ளார். கல்லக்குடி போராட்டம் குறித்து திமுகவினர் கூறுவதற்குமுற்றிலும் மாறாக அப்புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
அவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பதை திமுகவினர் மறுக்க மாட்டார்கள். கல்லக்குடிபோராட்டம் குறித்து சபாநாயகருக்கும், இங்கே அமர்ந்துள்ள துரைமுருகனுக்கும் நன்றாகவே தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications