மும்பை, புனே, கோவா, ஹூப்ளி, தார்வாட், பெல்காமில் நிலநடுக்கம்
மும்பை:
மும்பை, புனே, வட கர்நாடகத்தின் ஹூப்ளி, தார்வாட், பெல்காம் உள்பட பல பகுதிகள் மற்றும் கோவா முழுவதும் இன்றுநிலநடுக்கம் ஏற்பட்டது.
பிற்பகல் 3.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 1 நிமிடம் வரை நீடித்தது. ரிக்டர் அளவுகோளில் 5.1 என்ற அளவுக்குஇந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மும்பை, புனே, கோவாவில் நில நடுக்கத்தையடுத்து அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அலறியடித்துக் கொண்டுகீழே இறங்கி ஓடிவந்தனர். மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் கொய்னா பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
மும்பையில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து மக்கள் தாற்காலிகமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
கோவாவில் இந்த நிலநடுக்கம் 22 நொடிகள் நீடித்தது.
மகாராஷ்டிரத்தை ஒட்டிய வட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹூப்ளியில் கட்டடங்கள் ஆடியதால்மக்கள் அலறியடித்து ஓடினர். பெல்காமில் ஒரு சில நொடிகளே நிலநடுக்கம் நீடித்தது.
மகாராஷ்டிரத்தில் கொய்னா பகுதி நிலநடுக்கங்களுக்கு பேர் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அந்தமானில் தொடர்ந்து இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications