சேலம் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் தனி வட்டாட்சியர் (துயர் துடைப்பு) அலுவலகத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவைத் தாண்டி லஞ்சஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சேலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய துயர் துடைப்பு நிதியில்பெருமளவில் முறைகேடு செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குப் புகார் வந்தது.
இதையடுத்து திங்கள்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.மாலை தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்தது.
இந்த விசாரணையின்போது, பொதுமக்களுக்கு வழங்க அரசு விநியோகித்த 83 காசோலைகள் வழங்கப்படாமல்இருந்தது தெரிய வந்தது. மேலும் ரூ. 6000 லஞ்சப் பணமும் கைப்பற்றப்பட்டது.
தனி வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications