பூகம்பத்தால் 12 செ.மீ. நகர்ந்துவிட்ட இந்தியா!!!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் இந்தியத் துணைக் கண்டமே ஒட்டுமொத்தமாக இந்தோனேஷியாவைநோக்கி 12 செ.மீ. அளவுக்கு நகர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய நிலவியல் ஆராய்ச்சி மையம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பூகம்பம் நிகழ்ந்தவுடனேயே அந்தமான், நிகோபார் தீவுகள் சில மீட்டர்கள் அளவுக்கு தென்மேற்காக நகர்ந்தது தெரியவந்தது.

இந் நிலையில் இந்திய நிலப்பரப்பும் 12 செ.மீ. அளவுக்கு இந்தோனேஷியாவை நோக்கி நகர்ந்துள்ளதை சாட்டிலைட்உதவியுடனான நிலவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளது.

பூமிக்கு மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ள குளோபல் பொசிஷனிங் செயற்கைக் கோள்களின் உதவியால் இந்த நகர்வு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட தேசிய நிலவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் வினீத் கஹாலத்கூறுகையில்,

பெங்களூருக்கும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள மேடன் என்ற இடத்துக்கும் இடையிலான தூரம் 12 செ.மீ.குறைந்துவிட்டதை செயற்கைக் கோள்கள் உறுதி செய்கின்றன.

மேலும் தென்னிந்தியாவின் பல பகுதிகள் கிழக்குப் பக்கமாக 10 மி.மீ. அளவுக்கு நகர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார்.

மீண்டும் மாபெரும் பூகம்கம்:

இதற்கிடையே கடலுக்கு அடியில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே மீண்டும் பெரும் பூகம்பம் ஏற்படவாய்ப்பிருப்பதாக பிரிட்டிஷ் பல்கலைக்கழக நிலவியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

டிசம்பர் 26ம் தேதி சுமத்ரா தீவுக்கு அருகே இந்து மகாக் கடலில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 9.0 என்றஅளவுக்கு அந்த பூகம்பம் பதிவானது. தொடர்ந்து அப் பகுதியில் நிலநடுக்கங்கள் நேர்ந்தவண்ணம் உள்ளன.

இந் நிலையில் சுமத்ராவின் மேற்குக் கடற்கரையையொட்டி மீண்டும் மாபெரும் தாக்குதவற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகஅல்ஸ்டர் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் நிலவியல் ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியர்களான ஜான் மெக்லோஸ்கிஎச்சரித்துள்ளார்.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.5 என்ற அளவில் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதிகபட்சமாக 8.5 என்றஅளவில் கூட பூகம்பம் ஏற்பட்டு பாண்டார் ஏக் பகுதியை சுனாமி தாக்கலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்.

டிசம்பர் 26ல் ஏற்பட்ட மாபெரும் பூகம்பம் காரணமாக சுமத்ரா பகுதியில் இரு நிலப் படுகைகள் மீது அதிகமான அழுத்தம்ஏற்பட்டு வருகிறது.

இந்த அழுத்தம் எந்த நேரத்திலும் அதிசக்தியாக மாறி, பெரும் அதிர்வாக நிலத்திலிருந்து வெளியேறலாம் (பூகம்பமாக) என்றுஅவர் கூறியுள்ளார்.

இந்த இரு நிலப்படுகைகளிலும் 1833 மற்றும் 1861ல் பெரும் பூகம்பம் உருவாகி, சுனாமி அலைகள் ஏற்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+