For Daily Alerts
Just In
மோடிக்காக அமெரிக்க தூதரகம் முன் காங். முஸ்லீம் பிரமுகர் போராட்டம்
சென்னை:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா தர மறுத்ததைக் கண்டித்து அமெரிக்க துணைத் தூதரகம் முன்புஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிரஸ் பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.
நரேந்திர மோடிக்கு விசா மறுத்த அமெரிக்காவின் செயலைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையிைல் உள்ள அமெரிக்கதுணைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை இளைஞர் காங்கிரஸ் துணத்தலைவர் எஸ்.எஸ்.ஷபீர் அறிவித்திருந்தார்.
இதற்காக அவர் ஆட்டோவில் காங்கிரஸ் கொடியுடன் துணைத் தூதரகம் நோக்கி வந்தபோது போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைதுசெய்தனர்.
Comments
Story first published: Saturday, March 19, 2005, 5:30 [IST]