மகன்களுக்கு கண் தானம் செய்ய தற்கொலை செய்து கொண்ட தாய்!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், மகன்களுக்கு கண் தானம் செய்வதற்காக தற்கொலை செய்து கொண்டு இறந்தார் ஒரு தாய்.

சென்னை கொடுங்கையூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி தமிழ்ச் செல்வி. இவர்களது சொந்தஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கம்பட்டி ஆகும்.

இவர்களுக்கு குமரன், மோகன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள்.குமரன் 12வது வகுப்பும், மோகன் 9வது வகுப்பும் படித்து வருகின்றனர்.

இருவரும் கண் பார்வையின்றி அவதிப்படுவதைப் பார்த்து தமிழ்ச் செல்வியும், சங்கரும் வேதனைப்பட்டு வந்தனர்.தான் இறந்த பிறகு தனது இரு கண்களையும் தனது குழந்தைகளுக்கு பொருத்துமாறு கூறி கண்களைத் தானம்செய்திருந்தார் தமிழ்ச் செல்வி.

இந்த நிலையில், தமிழ்ச் செல்வி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் இணை ஆணையர் சைலேந்திரபாபு தலைமையில் போலீஸார் விரைந்துவந்தனர்.

தனது மனைவி கண்களைத் தானம் செய்திருப்பதாக போலீஸாரிடம் சங்கர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துஉடனடியாக அறுவைச் சிகிச்சை மூலம் அவரது கண்கள் அகற்றப்பட்டன. அந்தக் கண்களை, குமரன், மோகன்ஆகியோருக்கு ஆளுக்கு ஒரு கண்ணாகப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கண்கள் ஒருவேளை அவர்களுக்குப் பொருந்தாவிட்டால், பார்வையற்ற வேறு யாருக்காவது பொருத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்த தாயார், தங்களுக்குக் கண் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்கொலைசெய்து கொண்டது மிகவும் வேதனை தருவதாக குமரனும், மோகனும் கூறி கதறி அழுதது பார்த்தவர்களை பதறச்செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+