சபாநாயகர்கள் மாநாடு: காளிமுத்து போகவில்லை!
சென்னை:
டெல்லியில், நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூட்டியுள்ள சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டது தொடர்பாக விவாதிக்க மாநில சட்டசபை சபாநாயகர்களின் மாநாட்டை சோம்நாத் சாட்டர்ஜி இன்றுகூட்டியுள்ளார்.
இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்கள் அனைவரும்கலந்து கொள்கிறார்கள். ஆனால்இக்கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களின் சபாநாயகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது.
தமிழக சபாநாயகர் காளிமுத்து இதில் கலந்து கொள்வாரா என்பதில் குழப்பம் இருந்து வந்தது. இந்த நிலையில் காளிமுத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காளிமுத்துவே கூறுகையில், நான் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு விசேஷ காரணங்கள் எதுவும் இல்லை. நான் கூட்டத்தில்கலந்துகொள்ளவில்லை என்று மட்டும் காளிமுத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications