பாக்: தீவிரவாதிகள் ராணுவம் மோதலில் 17 இந்துக்கள் பலி
குவெட்டா:
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியின தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்தமோதலில் இந்துக் கோவில் மீது ராக்கெட் தாக்குதல் நடந்தது. இதில் 17 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை இச் சம்பவம் நடந்துள்ளது. இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தெரா பக்தி என்ற இடத்தில்ராணுவ வாகனங்கள் சென்றபோது தீவிரவாதிகள் ஆதரவு பழங்குடியினர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 ராணுவ வீரர்கள்பலியாயினர்.
இதையடுத்து ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் 37 பேர் பலியாகியுள்ளனர். இதில் 17 பேர் இந்துக்களாவர்.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்திக் கொண்டதில் அங்குள்ள இந்துக்கோவிலிலும் அருகாமையில் இருக்கும் சிறுபான்மை இந்துக்களின் வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர்பலியாகியுள்ளனர்.
கோவில் மீது விழுந்த ராக்கெட்டை வீசியது ராணுவமா, பழங்குடியினரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications