தமிழ் பாதுகாப்பு இயக்க பயணம் தொடக்கம்
சென்னை:
திருச்சியில் நடைபெறவுள்ள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோட்டமாக டாக்டர் ராமதாஸ், திருமாவளவன்,பழ. நெடுமாறன் மற்றும் டாக்டர் சேதுராமன் ஆகியோர் மேற்கொள்ளும் ஊர்திப் பயணம் இன்று தொடங்கியது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் வருகிற 26ம் தேதி 3வது மொழிப் பார் அறிவிப்பு மாநாடுநடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் மேற்கண்ட நான்கு தலைவர்களும்ஊர்திப் பயணம் மேற்கொண்டு 26ம் தேதி திருச்சியை அடைகிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பூந்தமல்லியில் தனது ஊர்திப் பயணத்தை இன்று காலை தொடங்கினார்.திமுக தலைவர் கருணாநிதி கொடியசைத்து இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
சென்னையிலிருந்து புறப்படும் ராமதாஸ், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் வழியாக திருச்சி செல்கிறார்.
இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நாகையிலிருந்தும், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கோவையிலிருந்தும், டாக்டர் சேதுராமன் கன்னியாகுமரியிலிருந்தும் ஊர்திப்பயணத்தைத் தொடங்கினர்.