கோவிலுக்குள் காவலாளி வெட்டிக் கொலை!
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் சிவன் கோவில் வளாகத்தில், இன்று காலை கோவில் காவலாளி அடையாளம்தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
திருவெண்ணை நல்லூர் சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்ற பழமையான கோவிலாகும். இந்தக் கோவிலில் காவலாளியாகபணியாற்றி வந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சண்முகம் இன்று காலை வழக்கம் போல பணியில் இருந்தார்.
அப்போது கோவிலுக்குள் வந்த ஒரு கும்பல், சண்முகத்தை சரமாரியாக தாக்கியது. அரிவாள் மற்றும் கட்டைகளால்தாக்கப்பட்டதால், தலையில் படுகாயம் ஏற்பட்டு சண்முகம் சம்பவ இடத்திலேயே பிணமானார்.
சிவன் கோவிலுக்குள் நடந்த இந்த பயங்கர கொலைச் சம்பவம் திருவெண்ணைநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கொலைக் கும்பல், கொள்ளை முயற்சியில்ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவிலுக்கு போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவலாளிபடுகொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications