கும்மிடிப்பூண்டியில் தேர்தல் ஆணைய குழு ஆய்வு
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் 3 பேர் கொண்ட குழுகும்மிடிப்பூண்டியில் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக உறுப்பினர்கள் மரணமடைந்து விட்டதால் அங்கு இடைத் தேர்தல் நடத்தவேண்டியுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.
இரு தொகுதிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவை மத்திய தேர்தல் ஆணையம்அனுப்பியுள்ளது. இக்குழுவினர் காஞ்சிபுரத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று கும்மிடிப்பூண்டி வந்த இக்குழுவினர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன்ஆலோசனை நடத்தினர். இடைத் தேர்தல் குறித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வுகள் முடிந்த பின்னர் இரண்டொரு நாட்களில் தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications