ஊட்டி பூங்காவில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை
ஊட்டி:
ஊட்டியில் உள்ள பிரபலமான தாவரவியல் பூங்காவில் 2 மாதங்களுக்கு திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருடாந்திர மலர்க் கண்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது.
இதையடுத்து தாவரவியல் பூங்காவில் சினிமாப் படப்பிடிப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலர்க் கண்காட்சிஎப்போது தொடங்கும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
என்றாலும், அதற்கு தயாராகும் வகையில் படப்பிடிப்புகளுக்கு 2 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக ஊட்டியில் நல்ல மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோஷமடைந்துள்ளனர்.இந்த மழையினால் மலர்த் தாவரங்களின் வளர்ச்சி சீராக இருக்கும் எனவும், பூக்கள் ஏப்ரல் மத்தியில் மலர்ந்து உதகையேரம்மியமாக இருக்கும் எனவும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications