ஸ்ரீநகர்:பஸ் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்- முஸாபராபாத் பஸ்சில் பயணம் செல்வதற்காக பயணிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இன்று தீவிரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் - முசாபராபத் பஸ் போக்குவரத்து நாளை தொடங்க உள்ளது. இதனையடுத்து பயணிகள் ஸ்ரீநகரில் உள்ள பயணிகள்மாளிகையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே பஸ் போக்குவரத்தை தொடங்கக் கூடாது என்று தீவிரவாதிகள் கடும்எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனாலும் இதையும் மீறி பஸ் போக்குவரத்தை தொடங்குவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. பஸ் போக்குவரத்துக்கானவெள்ளோட்டமும் விடப்பட்டது.

இந் நிலையில் பயணிகள் தங்கியிருந்த கட்டடத்தின் மீது இன்று மாலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால்பயணிகள் மாளிகை மற்றும் போக்குவரத்து கழகம் தீ பற்றி எரிகிறது. ஆனாலும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் தங்கியிருந்த கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படை வீரர்கள்துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு 4 தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.

தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து காஷ்மீரில் பெரும் பதட்டம் நிலவுவதால் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உயர்அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே ஸ்ரீநகரில் உள்ள ஷெகர்- இ - காஷ்மீர் ஸ்டேடியம் அருகே ராணுவத்தினருக்கும் , தீவிரவாதிகளுக்குமிடையேஇன்று துப்பக்கி சண்டை நடந்தது. இந்த ஸ்டேடியத்தில் இருந்து தான் நாளை பிரதமர் மன்மோகன் சிங், பஸ் போக்குவரத்தைகொடியசைத்து துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+