சென்னை-மலேசியா: மே முதல் ஏர்-சஹாரா விமானம்
டெல்லி:
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு ரூ. 10,000 இரு வழிக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடங்குகிறது ஏர்-சஹாராநிறுவனம்.
குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு சர்வீஸைத் தொடங்க அந் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ஏர்-சஹாரா தலைமை செயல் அதிகாரியான ரோனோ தத்தா,
டெல்லி-சிங்கப்பூர் இடையே வரும் மே 11ம் தேதி முதல் விமான சேவையை ஏர்-சஹாரா தொடங்கும். அதே போல மே 15ம் தேதிமுதல் சென்னை-கோலாலம்பூர் இடையே புதிய சேவை தொடங்கப்படும். இந்த விமானங்களின் இரு வழிக் கட்டணம் ரூ. 10,000ஆக இருக்கும்.
அதே போல கோவை, விசாகபட்டிணத்துக்கும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியால் பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்ட விமானிகளை நாங்கள்இழந்துவிட்டோம். இந்த 20 பேரும் சமீபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷ்ஷர் ஏர்லைன்ஸ்நிறுவனங்களுக்குத் தாவிவிட்டனர்.
இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications