For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வன்முறை: வைகோ மீதான வழக்கு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீதான தேர்தல் வன்முறைதொடர்பான வழக்கு இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 1984ம் ஆண்டு நடந்த மயிலாடுதுறை சட்டசபைத் தேர்தலின் போது திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸார்வழக்குத் தொடர்ந்தனர். அப்போது திமுகவில் இருந்த வைகோ, கோ.சி.மணி உள்ளிட்ட 7 பேர் மீது அதிமுகவைச் சேர்ந்ததாமரைக்கனி (இப்போது திமுகவில் இருக்கிறார்) உள்ளிட்டோரைத் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.

நீண்ட காலமாக மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில் சமீபத்தில் விசாரணைமுடிவடைந்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையொட்டி வைகோ, கோ.சி. மணி உள்ளிட்டோர் இன்று மயிலாடுதுறை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிபதிஜெயசூர்யா இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்குமுடிவுக்கு வந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X