வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ஆதிகேசவன்
சென்னை:
கடன் வாங்கித் தருவதாக பலரிடம் பல கோடி ஏப்பம் விட்ட ஆதிகேசவன் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பலரைஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக ஆதியின் மீது நேற்று ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மைசூரில் வைத்து ஜெயவீரனை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அவரை இன்று சென்னைக்குக் கொண்டு வரநடவடிக்கை எடுத்துள்ளனர். ஜெயவீரனிடம் விசாரணை நடத்தினால், ஆதி கேசவன் குறித்த மேலும் பல தகவல்கள் தெரிய வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆதிகேசவனின் பண மோசடி தொடர்பாக இதுவரை 16 புகார்கள் போலீஸுக்கு வந்துள்ளது. இந் நிலையில்சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ஒருவரிடம் ஆதி கேசவன் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்ததாக ஒரு புகார் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது. இது தனி வழக்காக பதிவு செய்யப்படும் என்றுதெரிகிறது.
ஆதிகேசவன் மீது பாய்கிறது குண்டாஸ் !!












Click it and Unblock the Notifications