சென்னை-டெல்லி விமானத்தில் கோளாறு: 147 பயணிகள் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து இன்று காலை டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் கோளாறு காரணமாக அவசரமாகதரையிறக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் இருந்த சுப்பிரமணியசாமி உட்பட147 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து இன்று காலை 6.50 மணியளவில் இந்தியன் ஏர்லைன்ஸின் ஐசி 440 என்ற விமானம் டெல்லிக்கு புறப்பட்டுசென்றது. இதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி உட்பட 147 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 45 நிமிடத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமானத்தின் பைலட் சென்னை கட்டுப்பாட்டுஅறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.

இதையடுத்து அந்த விமானம் 7.50 மணியளவில் தரை இறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள்அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் பிறகு அனைவரும் வேறு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+