மீனாட்சி மாயம்: மெஸ்மரிசம் மூலம் விசாரிக்கும் சிபிசிஐடி
திருச்சி:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி வழக்கில், அவரது கணவர் ஜோதி ராமலிங்கம் உள்ளிட்ட 4 பேரிடமும் லை டிடெக்டர் கருவியைத் தவிர,ஆழ்நிலை மனோவசிய முறையில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் பல மாதங்கள் ஆகிறது. இந்த வழக்கில் இதுவரை துப்புஏதும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீஸார் திணறி வருகின்றனர்.
இதன் முதல் கட்டமாக, நான்கு பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.எச்.ஐ.வி. சோதனை உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் இன்றும் நான்கு பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள்தொடர்ந்தன.
இதைத் தொடர்ந்து நான்கு பேரையும் சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகதிற்குக் கொண்டு செல்லவுள்ளனர்.
அங்கு லை டிடெக்டர் சோதனை தவிர ஆழ்நிலை மனோவசியம் எனப்படும் மெஸ்மரிசம் முறையின் மூலமும் விசாரணை நடத்த சிபிசிஐடிபோலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்த சோதனையை நடத்த குளித்தலை குற்றவியல் நீதிபதி ஜோதி அனுமதி வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications