சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் 2ம் இடம்
சென்னை:
சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் இந்திய அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளது. சென்ற நிதியாண்டில் ரூ. 10,000 கோடியைதாண்டி சாப்ட்வேர் ஏற்றுமதி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.
சென்ற 2004-05ம் நிதியாண்டில் இந்தியாவின் சாப்ட்வேர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு,கர்நாடகம் மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களின் பங்களிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.
சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கமிஷன் (நாஸ்காம்) சென்ற நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ரூ.78,000 கோடிமதிப்புள்ள சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.
இதன்படி இந்தியாவின் மொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்த 3 மாநிலங்களின் பங்களிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 60சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பங்களிப்பு 54சதவீதமாக (ரூ. 30,770 கோடி) இருந்தது.
சாப்ட்வேர் ஏற்றுமதியில் சென்ற நிதியாண்டில் அகில இந்திய அளவில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இதன் ஏற்றுமதி 52சதவீதம் உயர்ந்து ரூ. 37,600 கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. சென்ற நிதியாண்டில் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.10,703 கோடியாகஉயர்ந்துள்ளது. அதாவது40 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 7,621.50 கோடியாக இருந்தது.
ஆந்திர மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதியும் சென்ற நிதியாண்டில் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தின் சாப்ட்வேர்ஏற்றுமதி 62 சதவீதம் உயர்ந்து ரூ. 8,145 கோடியாகியுள்ளது.
சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்த 3 மாநிலங்களின் தலைநகர்களான சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகியவற்றின்பங்களிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 2ம் நிலை நகரமான கோவை ரூ. 49 கோடி மதிப்புள்ள சாப்ட்வேரை ஏற்றுமதி செய்துள்ளது. சேலம், சிவகாசி,ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சாப்ட்வேர் ஏற்றுமதி அதிகரித்து வரும் அளவிற்கு ஹார்டுவேர் ஏற்றுமதி அதிகரிக்கவில்லை.