திருப்போரூர் முருகன் கோவிலில் ஜெ-சசி-இளவரசி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று திருப்போரூர் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவும் சசிகலாவும் சிறுதாவூரில் புதிதாகக் கட்டியுள்ள மாபெரும் பங்களாவில் தான்தங்கியுள்ளனர்.
ஆனால், இந் நிலையில் ஜெயலலிதா திருப்போரூர் முருகன் கோவிலுக்குப் புறப்பட்டார். அவருடன் சசிகலா, இளவரசிஆகியோரும் சென்றனர். கோவிலில் ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
இன்று வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில் இந்த மூவருமே பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும்என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அங்கு போகாமல் சிறுதாவூர் பங்களாவில் தங்கியிருந்தபடி கோவில் விசிட் மட்டும்மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications