எல்லாம் "அம்மா செயல்: மைதிலி, விஜய்குமார்
காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:
அம்மா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த வெற்றி என்று காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றஅதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசும், கும்மிடிப்பூண்டியில் வெற்றி பெற்ற கே.எஸ்.விஜயக்குமாரும் கூறியுள்ளனர்.
தேர்தல் வெற்றி குறித்து மைதிலி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மா மீதான மக்கள்நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது. இது அவருக்கு கிடைத்த வெற்றி. மக்கள் அம்மாவின் பக்கமே உள்ளனர் என்பதுமீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றார்.
கே.எஸ்.விஜயக்குமார் கூறுகையில், கும்மிடிப்பூண்டி அம்மாவின் கோட்டை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இதுமுதலமைச்சர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மாவுக்கு கிடைத்த வெற்றி. அதிமுக தொண்டர்களும் இரவு, பகல் பாராதுஉழைத்தார்கள்
அதிமுக பெற்றிருப்பது மகத்தான வெற்றி. இந்த வெற்றியை முதலமைச்சர் அம்மாவின் பொற் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். அவரதுஉத்தரவுப்படி தொகுதி மக்களுக்காக உழைப்பேன் என்றார்.
விஜயகுமார் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன் அவருக்கு தேர்தல் அதிகாரி சுஜி தாமஸ் சான்றிதழைவழங்கினார்.
அதிமுகவினர் கொண்டாட்டம்:
இரு தொகுதி தேர்தல் வெற்றியை அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள்வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் சரவெடிகளை கொளுத்தியும் சாலைகளில்,பஸ்களில் சென்றவர்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டின் முன்பும் ஏராளமான அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்இடைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications