குழந்தை கடத்தல்: "போலி தந்தை கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடத்தி வரப்படும் குழந்தைகளுக்குஇவர் தான் தந்தை என்று கையெழுத்து போட்டுள்ளார்.

சென்னையில் பராமரிப்பின்றி திரியும் குழந்தைகளை திருடி, அவற்றை விற்பனை செய்து வந்த கும்பல் பற்றி போலீஸாருக்குதெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் அந்தக் கும்பலை சேர்ந்த ஷேக் தாவூத் மற்றும் அவரதுஉறவினர்களான வரதராஜூ, இவரது முதல் மனைவி சலீமா, நவ்ஜீன், சபீரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வரதராஜூவின் 2வது மனைவி ஜெபக்கனி, தாவூத் உட்பட சிலர் தேடப்பட்டு வந்தனர்.

இந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில் மலேஷியன் சோசியல் சர்வீஸ் என்ற நிறுவன் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகடத்தல் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகளை கடத்தி தொண்டு நிறுவனத்திற்கு விற்றவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த மோசடியில்ஈடுபட்ட மேலும் பலரது பெயர்கள் தெரியவந்தன.

இந் நிலையில் தேடப்பட்டு வந்த சென்னையை சேர்ந்த தாவூத் (வயது 50) நேற்று போலீஸிடம் சிக்கினார். தாவூத்திடம் விசாரணைநடத்தியதில், அவர் தான் கடத்திக் கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு தந்தை என்று கையெழுத்து போடுவார் எனதெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+