குழந்தை கடத்தல்: "போலி தந்தை கைது
சென்னை:
சென்னையில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடத்தி வரப்படும் குழந்தைகளுக்குஇவர் தான் தந்தை என்று கையெழுத்து போட்டுள்ளார்.
வரதராஜூவின் 2வது மனைவி ஜெபக்கனி, தாவூத் உட்பட சிலர் தேடப்பட்டு வந்தனர்.
இந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில் மலேஷியன் சோசியல் சர்வீஸ் என்ற நிறுவன் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகடத்தல் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளை கடத்தி தொண்டு நிறுவனத்திற்கு விற்றவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த மோசடியில்ஈடுபட்ட மேலும் பலரது பெயர்கள் தெரியவந்தன.
இந் நிலையில் தேடப்பட்டு வந்த சென்னையை சேர்ந்த தாவூத் (வயது 50) நேற்று போலீஸிடம் சிக்கினார். தாவூத்திடம் விசாரணைநடத்தியதில், அவர் தான் கடத்திக் கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு தந்தை என்று கையெழுத்து போடுவார் எனதெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications