For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி: நாகப்பட்டிணம் வருகிறார் பில் கிளிண்டன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Bill Clintonசுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தைப் பார்வையிட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன்வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார்.

சுனாமி தாக்கதலுக்கு தமிழகத்தின் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாகநாகப்பட்டிணண் மாவட்டத்தில்தான் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான சிறப்புத் தூதர் என்ற முறையில், பில் கிளிண்டன்தமிழகம் வருகிறார். வருகிற 27ம் தேதி சென்னை வரும் அவர் நாகை செல்கிறார்.

அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடும் அவர் நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்வார்.

மேலும் சென்னையிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிளிண்டன் பார்வையிடவுள்ளார். தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு, சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிளிண்டன் செல்கிறார்.

உலக வங்கித் திட்டம் தொடக்கம்:

இதற்கிடையே உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுனாமி மறு கட்டமைப்புத் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றம் எளிய நிகழ்ச்சியில் ரூ. 1,852.74 கோடி (434 மில்லியன் டாலர்) நலத் திட்டம்தொடங்கப்பட்டது.

இதில் உலக வங்கியின் இந்தியத் தலைவர் மைக்கல் கார்ட்டர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கார்ட்டர் கூறுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு, வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு மறு கட்டமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பாதியைதமிழகத்தின் சுனாமி மறு கட்டமைப்புக்கு ஒதுக்கிவிட்டோம். இந்தியாவில் சுனாமி நிவாரணப் பணிகள் திருப்திகரமாகவேஉள்ளன என்றார்.

அதே போல பாண்டிச்சேரி மாநிலத்துக்கான திட்டத்தை அம் மாநில முதல்வர் ரங்கசாமி புதுவையில் தொடங்கி வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X