குடியுரிமை: இங்கிலாந்தில் கடுமையாகும் சட்டம்
லண்டன்:
இங்கிலாந்தில் குடியுரிமை பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குடியுரிமை சட்டத்தை கடுமையாக்கஅந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் குடியுரிமை பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவை சேர்ந்தவர்கள்.இங்கிலாந்தில் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி 1997ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.
இதற்குப் பிறகு இங்கிலாந்தில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இங்குகுடியுரிமை பெறுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். கால் பகுதி இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.
பாகிஸ்தானிலிருந்து இங்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 14,125 பேர்குடியுரிமை பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த படியாக சோமாலியாவிலிருந்து 14,115 பேரும்,
இந்தியாவிலிருந்து 13,540 பேரும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 6,370 பேரும், நைஜீரியாவிலிருந்து 6,280 பேரும் குடியுரிமைபெற்றுள்ளனர்.
கடுமையான சட்டம்:
இதற்கிடையே குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெளிநாட்டினரின் வருகைகட்டுப்படுத்தப்படும் என்று இங்கிலாந்து ராணி எலிஸபெத் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இன்று அவர் உரையாற்றுகையில், இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளைமேம்படுத்தும் விதத்தில் வெளிநாட்டினர் குடியுரிமை பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படும். வெளிநாட்டினருக்குஅடையாள அட்டை முறை விரைவில் அமல்படுத்தப் படும் என்றார்.












Click it and Unblock the Notifications