குடியரசுத் தலைவர் கலாம் இன்று ரஷ்யா புறப்பட்டார்
டெல்லி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 2 வார சுற்றுப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். விமானநிலையத்தில் அவரை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2 வார சுற்றுப்பயணம்செல்கிறார். இதற்காக இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவரைபிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
மாஸ்கோவிலுள்ள ஏவுகணை தயாரிப்பு மையம், ராணுவ ஆராய்ச்சி மையம், விஞ்ஞான மையம், சுகோய் விமான தொழிற்சாலைஆகியவற்றை அப்துல் கலாம் பார்வையிடுகிறார்.
பின்னர் கிரம்ளின் மாளிகையிலுள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
25ம் தேதி வரை கலாம் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். சோவியத் ரஷ்யா உடைந்த பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் ரஷ்யாசெல்வது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்ய பயணத்தை முடித்த பிறகு 26ம் தேதி கலாம் சுவிட்சர்லாந்து செல்கிறார். 27ம் தேதி ஜெனீவாவில் அந் நாட்டுவிஞ்ஞானிகளுடன் அவர் உரையாற்றுகிறார். அன்று சுவிட்சர்லாந்து நாட்டு ஜனாதிபதி அளிக்கும் விருந்திலும் அவர் கலந்துகொள்கிறார்.
29ம் தேதி கலாம் ஐஸ்லாந்து செல்கிறார். இந்தியாவிலிருந்து ஐஸ்லாந்துக்கு கூடுதல் விமானப் போக்குவரத்து இயக்குவது குறித்தஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுகிறார்.
இதன் பிறகு ஜூன் 1ம் தேதி கலாம், உக்ரைன் செல்கிறார். அங்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர், 3 ஒப்பந்தங்களில்கையெழுத்திடுகிறார்.
இரு வார சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜூன் 4ம் தேதி இந்தியா திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications