For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத் தேர்தல் தோல்வியால் சேது சமுத்திரத் திட்டம் அறிவிப்பு: பாஜக

By Staff
Google Oneindia Tamil News

சென்னிமலை (ஈரோடு):

சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்தவுடன், சேது சமுத்திரத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள் என்று தமிழகபாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு வந்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்பு, தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக தேர்தல் ஒழுங்காக நடைபெறும் என்று திமுகதலைவர்களும், கூட்டணித் தலைவர்களும் கூறி வந்தனர்.

ஆனால் தேர்தலில் தோற்ற பிறகு, பண பலம் வென்று விட்டது. வாக்காளர்களை விலைக்கு வாங்கி விட்டனர் என்று கூறி வருகின்றனர்.

இதைப் பார்க்கும் போது திமுகவினர் என்னவோ பணத்தையே செலவிடவில்லை என்பது போல இருக்கிறது. இடைத் தேர்தல்முடிவையடுத்துத் தான் சேது சமுத்திரத் திட்டத்தை அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் அவர்கள் தமிழக நலனுக்காக எதையும் செய்யாமல் உள்ளனர். இதற்குக்காரணம் இருக்கிறது. வருகிற பொதுத் தேர்தலில் ஜெயித்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செய்து கொள்ளலாம் என்று அவர்கள்காத்திருக்கிறார்கள். தமிழக நலன் அவர்களுக்கு முக்கியமல்ல. ஆட்சியைப் பிடிப்பது தான் முக்கியம்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் பாஜக யாருடனும் கூட்டணி சேராது, கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்தே போட்டியிடுவோம்.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பின்னர் எங்களை முறைப்படி அணுகினால் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிப்போம் என்றார்ராதாகிருஷ்ணன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X