நாய்கள் சண்டை: வாக்கிங் சென்றவரை துப்பாக்கியால் சுட்ட ராணுவ மேஜர் கைது
சென்னை:
தனது வீட்டு முன் நாயுடன் வாக்கிங் சென்றவரை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற ராணுவ மேஜரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது அண்ணாஜி நகர். இப்பகுதியின் 3வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மேத்யூ. 72வயதாகும் இவர் ராணுவத்தில் மேஜராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இப்பகுதி நலச் சங்கத்தலைவராக இருந்தவர். பின்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக சங்கத் தலைவர் பதவியை விட்டு நீக்கப்பட்டவர்.
இதே பகுதியில் 2வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மணிவண்ணன். ஸ்பிக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சவுத் இண்டியன்கார்ப்பரேஷன் ஏஜென்சியில் மூத்த கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
நாய்கள் சத்தத்தைக் கேட்ட மேத்யூ, வீட்டை விட்டு வெளியே வந்து மணிவண்ணனை சப்தம் போட்டுள்ளார். நாயை ஏன் என் வீட்டு முன்புகொண்டு வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மணிவண்ணன், நான் என் நாயுடன் வாக்கிங் போவதற்கு உங்களிடம் பெர்மிஷன் வாங்கவேண்டுமா என்று கோபமாக கேட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆவேசமாக வீட்டுக்குள் சென்ற மேத்யூ ரிவால்வரை எடுத்து வந்து மணிவண்ணனை நோக்கிச்சுட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் வேகமாக விலகவே, அவரது நெஞ்சில் பாய வேண்டிய குண்டு, வலது முழங்கைப்பகுதியில் பாய்ந்து வெளியேறியது.
இதைப் பார்த்து பயந்து போன மேத்யூ தனது வீட்டுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளோர் மணிவண்ணனைமருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் உத்தரவின் பேரில் மேத்யூகைது செய்யப்பட்டார். அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த துப்பாக்கி உரிமம் ரத்துசெய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications