குறை கூறுவதை நிறுத்த வேண்டும்: ஜெ.வுக்கு வாசன் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை குறை கூறுவதை முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா என்ற புத்தகத்தை வாசன் இன்றுவெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக மக்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழர்களின் நூறாண்டுக் கனவு நனவாகியுள்ளது.

ஆனால் இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா நன்றியோ, பாராட்டோதெரிவிக்கவில்லை. இது அவரது அரசியல் அநாகரீகப் போக்கைக் காட்டுகிறது.

பத்திரிக்கைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் முதல் மூன்று இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பெற்றுள்ளார்கள். இதன்மூலம், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஆனால் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை வசை பாடி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. இனியாவது அதை அவர்நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தாமதாவதற்கு காரணம் தமிழக அரசு தான். மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவதாலும்,உரிய ஒத்துழைப்பைக் கொடுக்காத காரணத்தாலும் இந்தத் திட்டம் தாமதமாகி வருகிறது என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+