விடுதலைப்புலிகள்: ஜெ. அறிக்கைக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ஆதாரமற்ற பல தகவல்கள் அடங்கியிருப்பதாக திமுகதலைவர் கருணாநிதி குறை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பத்மநாபாகொலை குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை. விடுதலைப் புலிகளுக்கு எதிராககடுமையான நிலையை எடுத்து வரும் ஜெயலலிதா முன்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததை மக்கள் மறக்கவில்லை.
பத்மநாபா கொலை செய்யப்பட்ட கால கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஜெயலலிதா தீவிர ஆதரவு அளித்து வந்தார்.விடுதலைப்புலிகளுக்கு அன்றைக்கு குரல் கொடுத்து விட்டு இன்றைக்கு திமுக மீது பாய்வது ஏன்?
ஏனோதானோ என்று பேசுவதும், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில்வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம்.
ஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
என் உயிருக்கு குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண் - ஜெ












Click it and Unblock the Notifications