கொத்திய பாம்பை கடித்துக் குதறிய டீ மாஸ்டர்
கும்பகோணம்:
தன்னைக் கொத்திய பாம்பை கடித்தே கொன்றார் கும்பகோணத்தைச் சேர்ந்த டீக்கடையில் வேலை பார்த்து வரும் டீ மாஸ்டர் சந்தான சாமி.பாம்பைக் கடித்துக் கொன்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள கொரட்டூர் சந்தானபுரத்தைச் சேர்ந்தவர் சந்தானச் சாமி. இவர் டீக் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்துவருகிறார். சம்பவ தினத்தன்று கும்பகோணம் அரசு கால் நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்சந்தானச் சாமி.
உடனடியாக பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயற்சித்தார். ஆனால் பாம்பு வலுவாக கவ்வியிருந்ததால் கையை எடுக்கமுடியவில்லை. இதையடுத்து ஆவேசமடைந்த சந்தானச்சாமி, பாம்பைக் கடித்து, அதன் வயிற்றைக் கிழித்து கீழே துப்பினார். பின்னர்அவரது உடலில் விஷம் பரவியதன் காரணமாக வாயில் நுரை தள்ளி மயக்கடைந்து விழுந்தார்.
அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் சந்தானச்சாமியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சந்தானச்சாமி நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைக் கொத்தியை பாம்பை உயிருடன் விடாமல், தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கடித்துக் குதறிக் கொன்ற சந்தானச்சாமியைஅப்பகுதியினர் பிரமிப்புடன் பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications