For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை கடத்தல்: 4 பேருக்கு போலீஸ் காவல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கசென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சென்னை குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளை கடத்தி திருவேற்காடு அருகேயுள்ள சமூக சேவை நிறுவனத்தில் ரூ.10,000க்கு விற்ற கும்பலை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர். இந்தக் கும்பல் மூலம் 7 குழந்தைகள் கடத்தப்பட்டுவிற்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக வரதராஜுலு, சலீமா, சபீரா, ஷேக் தாவூது ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிரஜெபக்கனி என்ற பெண் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந் நிலையில் வரதராஜுலு உள்ளிட்ட 4 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை நீதிமன்றத்தில்போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. நான்கு பேரையும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X