For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.டி.டி.முறை விரைவில் ரத்து: தயாநிதி மாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியா முழுவதும் உள்ளூர் கட்டணத்திலேயே பேசும் நிலையை ஏற்படுத்தவும், எஸ்.டி.டி. முறையை ரத்து செய்யவும் மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இந்த நிலை ஏற்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.

இதுகுறித்து தயாநிதி மாறன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்செல்போனுக்கு லேண்ட்லைனிலிருந்து பேச 0 டயல் செய்யத் தேவையில்லை. இந்த புதிய வசதி புதன்கிழமை முதல் (இன்று)அமலுக்கு வருகிறது.

இதேபோல, நாடு ழுவதும் டெலிபோனில் பேச எஸ்.டி.டி. வசதிக்குப் பதிலாக உள்ளூர் கட்டணத்திலேயே பேசும் நிலையைஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது செயல்பாட்டுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இதன் மூலம் கன்னியாகுமயிலிருந்து காஷ்மீர் வரை உள்ளூர் கட்டணத்திலேயே பேசும் வசதி ஏற்படும். இதனால்வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவர்.

நமது நாட்டின் மக்கள் தொகையில் 10க்கு ஒருவரிடம் தான் போன் உள்ளது. பி.எஸ்.என்.எல்லின் வாடிக்கையாளர் எண்ணிக்கை10 கோடியாகும். இதை அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் தயாநிதி மாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X