For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடல் நீரைக் குடித்த சுருளிராஜனின் அண்ணன் மகன் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மறைந்த நடிகர் சுருளி ராஜனின் அண்ணன் மகன், கடல் நீரைஅதிக அளவில் குடித்ததால், வாந்தி எடுத்து இறந்தார்.

சென்னை பாடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மறைந்த நடிகர் சுருளிராஜனின் அண்ணன் ஆவார். இவரதுமகன் கிருஷ்ணமூர்த்தி. மாமல்லபுரத்திற்கு தனது நண்பர்களோடு கிருஷ்ணமூர்த்தி சென்றிருந்தார்.

கடலில் குளித்தபோது, கடல் நீரைக் குடித்து விட்டார். இதனால் வாந்தி எடுத்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரைபாடிக்கு கொண்டு வந்த நண்பர்கள் அங்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று கிருஷ்ணமூர்த்தியை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றிகிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X