For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகப்பட்டினத்தில் பில் கிளின்டன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இன்று நாகப்பட்டினம் வந்த கிளின்டன் சுனாமியிலிருந்து மீண்ட சிறுவர்களுடன் உரையாடுகிறார்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் இன்று பிற்பகல் நாகப்பட்டினம் வந்தார். அங்கு அவர் சுனாமியால்பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

ஆசிய நாடுகளில் சுனாமி மறு சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடும், ஐ. நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியாக கிளின்டன்நியமிக்கப்பட்டுள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளை சுற்றிப் பார்த்து வரும் கிளின்டன், நேற்று முன்தினம்டெல்லிவந்தார். பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த கிளின்டன் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவரை தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம்கிளின்டன் நாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர்ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பெண்களை கிளின்டன்சந்தித்தார்.

பின் அங்கு மகளிர் சுய உதவிக்குழு சார்பில் வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டகிளின்டன், பணம் கொடுத்து சில பொருட்களை வாங்கினார்.

நாகை பயணத்தை முடித்துக் கொண்டு கிளின்டன் மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் இவர் இலங்கை புறப்பட்டுச்சென்றார்.

இன்று நாகை வருகிறார் கிளின்டன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X